Wednesday 1 May 2013

காதல் கிறுக்கல்கள்...-1

என் தேவதை நீ அல்லவா ?
உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதைகள் எல்லாம் எல்லோராலும்
ரசிக்கபடுவதன் ரகசியம் சொல்கிறேன் , கேளடி கண்மணி !
என் ஒவ்வொரு கவிதையும் , ஒவ்வொரு வரிகளும்
ஒவ்வொரு வாக்கியமும்,.ஒவ்வொரு வார்த்தையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் , உயிர்க்கவிதையே !
உன்னைவிட அழகாய் படைக்க எண்ணி,
முனைந்தும் முடியாத தோல்வி கவிதைகளே !
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் மனதை மயக்கி மடக்கி வைத்திருக்கும்
    உன் மனம்கவர் மூக்கின் நுனியே ரசித்து எட்டி எட்டி பார்க்கும்
    இரு குட்டி திருக்குறள் உன் இதழ்கள்

    - இதழ்கள் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொன் முத்து,பவளம் என மதிப்பினில்
பொலிவினில் உச்சமாய் இருப்பதை விட

உலகினிலி இதுவரை தோன்றிய வீரர்களின்
வீரத்தின் மிச்சமாய் இருப்பதை விட

தங்கம் கூட தரத்தினில் தோற்கும் ,தகதகக்கும்
அவள்தம் அங்கத்தின் அங்கமான
மச்சமாய் இருந்திட இச்சை எனக்கு ..

மச்சம்  
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

ஒரு முறையும் எனை தீண்டியதில்லை
ஒரு முறையும் தானும் தீண்டபட்டதில்லை
இருந்தும் , மனதால் ஒரு பெரும் ரகசியமஅறிவேன்
தரம் தனில் சிறந்த உன் கரம் அதன்
மென்மையில் முழுதாய் மயங்கி
மலர்களின் மொத்த இனமும் மடியேந்தும் ...

- கரம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
முகம்பார்த்த மாத்திரமே  மனதோடு
முனுமுனுக்க துவங்கிவிட்டேன்
முத்து முத்தாய்  மலர்ந்திருக்கும் அந்த
 முகப்பருக்கள் மூன்றினை,  முறைத்தபடி
முத்தமிட கூடவும் முடியாத என்
முரட்டு இதழ்களுக்கு இல்லாத
முக்கியத்துவம், அதற்க்குமட்டுமா ??

 - முகப்பருக்கள் -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விரைவாய் வளர்ச்சியினை விரும்பும் வெகுவானோர் மத்தியில்
விதிவிலக்காய் ,வித்தியாசமாய் வாழ்நாள் முழுவதும்
மடியினிலும், மார்பினிலும் அன்பான அரவனைப்பினில்
இருந்திடவே விழைகின்றேன் என்றும்
என்றென்றும் என்னவளின் மழலையாய் ......

- மழலை 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  என் மனதினில் உன் நினைவின் நிலைகள்
    ஆரம்ப நிலை ஆனந்தம்
    மத்திய நிலை அழகு
    ஆழ்நிலை பூரிப்பு
    இறுதி நிலை மட்டும் தவிப்பு

    - தவிப்பு -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  பக்தருக்கு இறைவனின் திருத்தலம்
    பிள்ளைகளுக்கு தாயின் திருவடி
    பெற்றோருக்கு பேதையின் வாய்மொழி
    போகிகளுக்கு போதையின் பாதை
    பசித்தவனுக்கு சோறு கண்ட இடம்
    கனவு காண்பவர்க்கு எண்ண கனவு
    இளையாராஜாவுக்கு நம்ம ஊரு
    யார் யார்க்கு எவ்வெவ்விடமோ
    அன்றும் , இன்றும், என்றும்
    என்றென்றும் எனக்கு உன் மடி

    - சொர்கம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
தேடிபார்கின்றேன் என் பெயரை நானும்
முதலிலோ,நடுவிலோ ,முடிவிலோ என
எங்கேனும் ஓர் இடம்  தியாகிகளின் பட்டியலில்
அறிமுகம் ஆனா நாளாய் பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய் உனக்காய் தியாகம் செய்ததால்

தியாகம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடலையும் கடந்திடும் அளவிற்கு கண்களில்
கடுமையான கண்ணீர் துளி சிந்திட தயார்

போதாதெனில், உடலின் ஒட்டுமொத்த உதிரத்தையும்
ஒரு சொட்டும் மீதமின்றி கொட்டிட தயார்

பகரமாய் ஏதும் பெரிதாய் வேண்டாம் ..

அவள்தம் பட்டுமேனியில் சொட்டு சொட்டாய் பூக்கும்
வியர்வைதுளியாய் வைத்திடும் வரம் வேண்டும்!

வரம் தருவீரா ? பல கடவுள்களில் எவரேனும் ??

-வியர்வைத்துளி-

காலவோட்டத்தில்  கிட்டத்தட்ட  வழக்கத்திலிருந்து 
நீங்கி விட்டது எண்ணற்ற தமிழ் வார்த்தைகள்
அழகாய் அழகை குறிக்கும் வார்த்தை என்பதனால்
அவ்வார்த்தை தழைக்க வேண்டுமென வந்தாயோ ?
எழிலாய் .....

எழில் 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
வெட்டவெளியில் உனக்காக மாத்திரம்
கொட்டிகொண்டிருக்கும் (ஐஸ்) கட்டி மழையை
ஆரத்தழுவி தேகத்தோடும்
மனதோடும்  கட்டிக்கொள்ளாமல்
பாத்திரமாய் காத்திருக்கும்  சித்திரமே
பத்திரமாய் காத்திரு உன்னவனின்
காதலுக்காக ......

வாழ்த்து !

   
   
   

No comments:

Post a Comment