Monday 29 April 2013

உருக்கம்

ஊருக்கு  ஒளிகொடுக்க
தன்னை தீயிட்டுக்கொண்ட மெழுகுவர்த்தி

ஆதவன் அவன் தன் அனல்தகிக்கும்
ஆதங்க பார்வைப்பட்ட பனிப்பாறை 

அடியில் அக்கினி தீமூட்டி பின்
பயன்பாட்டிற்க்கு எடுக்கப்படும்  தார்

தொழிற்ச்சாலையினில் புதியதாய்
பரிணாம பிறப்பெடுக்கும்  இரும்பு

இவை அனைத்தும்  அச்சச்சோ என
பரிதாபத்துடனும் ,ஏக்கத்துடனும்  பார்கின்றது

அனுதினமும் அழகான   உன் நினைவால்
அணுவணுவாய் உருகிடும்

இந்த அப்பாவி ஆசையின்  மனதை  கண்டு ...

   - உருக்கம் -

2 comments:

  1. Replies
    1. வந்தமைக்கும்
      வாசித்தமைக்கும்
      வாழ்த்தியமைக்கும்

      நன்றிகள் !!!!

      Delete